Sunday 16 September 2012

ஆறாயிரம் கூடுதல் ஆசிரியர் இடங்களுக்கு அனுமதி



காலிப் பணியிடங்கள் மற்றும் மாணவ, மாணவியரின் அதிக எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில், கூடுதலாக, 6,000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
               இதற்கான அரசாணை, நேற்று முன்தினம் வெளியாகி உள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது. கணிதம், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு பாடங்களில், இந்தக் கூடுதல் ஆசிரியர் நியமிக்கப்படுவர். ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில், 18 ஆயிரம் பட்டதாரி ஆசிரியரைத் தேர்வு செய்ய உள்ளது. அப்போது, இந்தக் கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்படும் எனத் தெரிகிறது.

No comments:

Post a Comment