Wednesday 19 September 2012

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் மீண்டும் தேர்வு எழுத கோரி வழக்கு



           திருவண்ணாமலையை சேர்ந்த விஜயராஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், ’’தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள சுமார் 25 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு தமிழக அரசு தகுதி தேர்வை நடத்தியது. இந்த தேர்வில் 6 லட்சத்து 73ஆயிரம் பேர் கலந்து கொண்டுதகுதி தேர்வு எழுதினர். இந்த
தேர்வு முடிவு கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. இந்த தகுதி தேர்வு முடிந்த பிறகு மத்திய அரசின் தேசிய கல்வி கவுன்சில் விதிமுறைப்படி மீண்டும் ஒரு தேர்வு நடத்த வேண்டும். ஆனால் தகுதி தேர்வு மதிப்பெண்ணை வைத்து அரசு புதிய ஆசிரியர்களை நியமிக்கிறது. இது தவறானது. நான் கணித பாடத்தில் தகுதி தேர்வு எழுதி, அதிக மதிப்பெண் பெற்றுள்ளேன். இதில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு எல்லாம் வேலை கொடுத்துவிடுவார்கள். இது தவிர சான்றிதழ் சரிபார்த்து உடனே பணி வழங்குவது தவறானது. எனவே தகுதி தேர்வு எழுதி வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு அவர்கள் பட்டபடிப்பு மதிப் பெண்ணை வைத்து அல்லது தனி தேர்வு வைத்து அதன் பிறகு ஆசிரியர்களை நியமிக்க வேண் டும்இவ்வாறு அவர் வழக்கில் கூறியுள்ளார். இந்த வழக்கை நீதிபதி நாகமுத் து விசாரித்தார், மனு தாரர் சார்பாக வக்கீல் பிரியா ரவி ஆஜராகி, தகுதி தேர்வு எழுதியவர்களை நேரடியாக ஆசிரியர்களாக நியமிக்க தடை விதிக்க வேண்டும் என்றார். தமிழக அரசு சார்பாக கூடுதல்அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, தகுதி தேர்வு எழுதிய பிறகு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களின் சீனியாரிட்டி அடிப்படையில்  பணி வழங்கப்படும்தற்போது பணி நியமனத்திற்கான அனைத்து பணிகளும் முடிந்து விட்டது. எனவே எந்த தடையும் விதிக்க கூடாது. தகுதி தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். இதை கேட்ட நீதிபதி, 18ம் தேதி விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment