Saturday 8 September 2012

அங்கன்வாடி மையங்களில் பேபி டாய்லெட் அமைக்க உத்தரவு



அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன், அனைத்து அங்கன்வாடிகளிலும், "பேபி டாய்லெட்" அமைக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
                தமிழகம் முழுவதும், பல அங்கன்வாடி மையங்கள்,
போதுமான அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்படுகின்றன. இங்கு விட்டுச் செல்லப்படும் குழந்தைகள், தெரு ஓரங்களில், இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். பள்ளிகளுடன் இணைந்து செயல்படும், சில அங்கன்வாடி மையங்களில் மட்டும், கழிப்பறைகள் உள்ளன. முறையான பராமரிப்பு இல்லாமல் இவை உள்ளதால், குழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்படுகிறது.
                  எனவே, குழந்தைகளின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன், அனைத்து அங்கன்வாடி மையங்களிலும், குழந்தைகளுக்கென பிரத்யேகமாக, "பேபி டாய்லெட்" அமைக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், வரும் நவம்பர் மாதத்துக்குள், கழிப்பறை அமைக்கும் பணிகளை முடிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
                 மாவட்டக் குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட மேலாளர், மணிமேகலை கூறியதாவது: ஒவ்வொரு கழிப்பறையும், 18 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளன. குழந்தைகள் எளிதில் பயன்படுத்துவதற்கு ஏற்ப, தாழ்வான கதவு; குழந்தைகள், உட்புறமாகக் கதவு பூட்டிக் கொண்டாலும், வெளியில் இருந்து எளிதில் திறக்கும் வகையிலான தாழ்ப்பாள்கள் அமைக்கப்பட உள்ளன. கழிப்பறையின் உட்பகுதியில், வண்ண கார்ட்டூன்கள் வரையவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு, மணிமேகலை கூறினார்.

No comments:

Post a Comment