Friday 8 February 2013

10ம் வகுப்பு நேரடி தனித்தேர்வர்களுக்கு பிப்.20 முதல் செய்முறைத் தேர்வு



                       பத்தாம் வகுப்பு நேரடித் தனித்தேர்வர்களுக்கு பிப்.,20 முதல் 28 வரை அறிவியல் செய்முறைத் தேர்வு நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. செய்முறைப் பயிற்சியில் பங்கேற்ற பள்ளிகளிலேயே செய்முறைத் தேர்விலும் இவர்கள்
பங்கேற்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தங்களுக்கான ஹால் டிக்கெட்டை பிப்ரவரி 18, 19, 20 ஆகிய தேதிகளில் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் பெற்றுக் கொள்ளலாம். செய்முறை வகுப்புகளில் பங்கேற்றதற்கான நோட்டுப் புத்தகத்தையும் அவர்கள் உடன் எடுத்துவர வேண்டும். புகைப்படத்துடன் கூடிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு பின்னர் வழங்கப்படும்.

No comments:

Post a Comment