Saturday 8 June 2013

ஆசிரியர் கல்வி பட்டய தேர்வு: தத்கல் திட்டம்



              ஆசிரியர் கல்வி முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுகளுக்கு, ஏற்கனவே விண்ணப்பிக்காதவர்கள், தத்கல் திட்டத்தின் கீழ், வரும், 10ம் தேதி முதல், 12ம் தேதி வரை, இணையதளம் வழியாக
விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: வரும், 24ம் தேதி முதல், ஜூலை, 11ம் தேதி வரை, ஆசிரியர் கல்வி பட்டய தேர்வுகள் நடக்கின்றன. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம், கடந்த ஏப்ரல், 29ம் தேதியுடன் முடிந்துவிட்டன. இதில், விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்கள், தத்கல் திட்டத்தின் கீழ், வரும், 10ம் தேதி முதல், 12ம் தேதி வரைwww.tn.gov.in/dge என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். கடந்த, 2008-09க்கு முன் தேர்வெழுதி தோல்வியடைந்த மாணவர்கள், புதிய பாடத்திட்டத்தின் கீழ், ஏழு பாடங்களையும் எழுத வேண்டும். சிறப்பு கட்டணமாக, 1,000 ரூபாய் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், வரும், 12ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment