Sunday 23 June 2013

சாதனை மாணவர்களுக்கு மீண்டும் பரிசளிப்பு விழா: கல்வித்துறை ஏற்பாடு



                       பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மாநில அளவில், இரண்டு மற்றும் மூன்றாமிடம் பெற்ற, மாணவ, மாணவியர், முதல்வரிடம் பரிசு பெற முடியாததால், கடும் ஏமாற்றமடைந்தனர்இதை அறிந்த முதல்வர், மீண்டும்
அவர்களுக்கு, பரிசு வழங்கும் விழா நடத்த உத்தரவிட்டுள்ளார்; இவ்விழா, 26ம் தேதி, நடைபெற உள்ளது. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பில், தமிழை முதல் பாடமாகப் படித்து, பொதுத்தேர்வில், மாநில அளவில், முதல், மூன்று இடங்களைப் பிடிக்கும், மாணவ, மாணவியருக்கு, ரொக்கப்பரிசு வழங்குவதுடன், அவர்களின், உயர்கல்வி செலவை, தமிழக அரசே ஏற்கிறது.

No comments:

Post a Comment