தமிழகம் முழுவதும் 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. இதற்கான முதற்கட்ட பணிகள் அரசு மேற்கொண்டுள்ளது. இதையடுத்து மாணவர்களின் சேர்க்கைக்கு ஏதுவாக தரம் உயர்த்தப்பட
உள்ள பள்ளிகளின் விவரங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான உரிய அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment