Thursday 18 July 2013

அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 23.08.2010 முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாமல் பணியாற்றும் ஆசிரியர்கள் விவரத்தை அளிக்க கோரி பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.



            அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில்  23.08.2010 முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாமல் பணியாற்றும் ஆசிரியர்கள் விவரத்தினை இமெயில் வாயிலாக உடனடியாக அளிக்க அனைத்து
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். விவரத்தில் ஆசிரியர் பெயர், ஆசிரியர் வகிக்கும் பதவி, பணிபுரியும் பள்ளி, நியமனம் செய்யப்பட நாள், ஆசிரியர் வகிக்கும் பதவிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதா? ஊதியம் வழங்கப்பட்டு வருகிறதா? போன்ற விவரங்களை அளிக்க பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment