தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் (டி.என்.பி.எஸ்.சி.)தேர்வு செய்யப்பட்ட 28 டி.எஸ்.பி.க்களை நியமனம் செய்வதற்கானஉத்தரவை தமிழக உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டிபிறப்பித்துள்ளார்.கடந்த 2010-
11-ஆம் காலகட்டத்தில் டி.எஸ்.பி. காலிப் பணியிடங்களுக்கானகுரூப் 1 தேர்வை டி.என்.பி.எஸ்.சி. நடத்தியது. இந்தத் தேர்வு தொடர்பானவழக்குகள் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளையில்நடைபெற்று வந்தன. வழக்குகளின் முடிவுக்கு வந்த நிலையில், தேர்வுபெற்றோரின் பெயர் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.அதன்படி,28 பேர் டி.எஸ்.பி.க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கே.பாலாஜி,பி.மணிகண்டன், வி.ஜெயசந்திரன், எஸ்.குத்தாலிங்கம், எஸ்.விஜயகுமார்,ஜி.கார்த்திகேயன், சி.சங்கு, ஏ.சி.கார்த்திகேயன், வி.கார்த்திக், ஏ.ஜி.இனிகோதிவ்யன், எஸ்.சதீஷ்குமார், எஸ்.அசோக்குமார், ஏ.அருண், என்.தேவநாதன்,கே.முத்துகுமார், டி.ஈஸ்வரன், என்.சாமுவேல் பால், வி.கோமதி,ஏ.வேல்முருகன், ஏ.முத்தமிழ், ஆர்.ரமேஷ் கிருஷ்ணன், ஆர்.விஷ்ணுப்ரியா,பி.கீதா, கே.மகேஷ்வரி, எம்.மீனாட்சி, ஜே.ஜரினா பேகம், ஆர்.ராஜேஸ்வரி,ஏ.கனகேஸ்வரி ஆகிய 28 பேர் டி.எஸ்.பி.க்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகதனது உத்தரவில் நிரஞ்சன் மார்டி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment