Friday 12 July 2013

பிற்படுத்தப்பட்டோர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்



                 இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் . சுந்தரவல்லி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்
புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு நிபந்தனையின்றி உதவித்தொகை வழங்கப்படுகிறது.இதனை அந்தந்த கல்லூரிகளிலேயே விண்ணப்பப் படிவங்களை பெற்று உரிய சான்றுடன் அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் www.tn.gov.in/bcmbcdept என்ற இணையதளத்திலும் தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment