Thursday 3 October 2013

மாணவர்களுக்கு இலவச பொருட்கள்: பள்ளிக்கு அனுப்ப நடவடிக்கை



        மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பொருட்களைநேரடியாக பள்ளிகளுக்கே அனுப்பிவினியோகிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசுஉதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்குநோட்டு புத்தகம்சைக்கிள்பைகாலணிஅறிவியல்
உபகரணம்லேப்-டாப் உட்பட 14 வகையான இலவச பொருட்கள் வழங்கப்படுகின்றன. தற்போதுஇப்பொருட்கள் சி...,- டி...க்களிடம் ஒப்படைக்கப்பட்டுதலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படுகின்றன. இதில்பல்வேறு சிரமங்கள் உள்ளன. இலவச பொருட்களை பெறஒவ்வொரு முறையும் வாடகை வாகனங்களை எடுத்துக்கொண்டுதலைமை ஆசிரியர்,ஆசிரியர்கள் ஆகியோர்மாவட்ட தலைநகருக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் ஆசிரியர்களின் பணிமாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டுதமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில்அந்தந்த கல்வியாண்டிற்கு தேவையான,இலவச பொருட்களைபள்ளிகளிலேயே நேரடியாக இறக்கி,தாமதமின்றி வினியோக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. "இப்பணியில்ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும்" எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment