Tuesday 8 October 2013

ஊதியக்குழு முரண்பாடுகளைக் களையக்கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்



           ஊதியக் குறைகளை களைவதற்காக அமைக்கப்பட்ட மூவர் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் 89 அரசாணைகள் வெளியிட்ட பிறகும் தொடரும் ஊதிய முரண்பாடுகளைக் களைய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களில் அரசு ஊழியர்கள்
ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்பொது அலுவலக வளாகம்நகராட்சி அலுவலம்வணிகவரித்துறை அலுவலகம்வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம்தாலுகா அலுவலகங்கள்ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கி.ஜெயபாலன் தலைமை வகித்தார். செயலாளர் சி.கோவிந்தசாமிபொருளாளர் எம்.ஜோ~p, சுகாதாரப் போக்குவரத்து ஊழியர் சங்க மாநிலப் பொருளாளர் கே.நாகராஜன்,சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் தி.நடராஜன்பி.ராஜசேகர்,பி.பாரதிசு.பக்கீர்முகமதுசெ.வீரமணிஎம்.சுவாமிநாதன் மற்றும் கு.ராஜமாணிக்கம்ரவீந்திரன்யோகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment