Tuesday 15 October 2013

மாணவர்களுக்கு ஆன்-லைன் மூலம் ஜாதி சான்று: தமிழக வருவாய் துறை முதன்மை செயலர் தகவல்



            கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த 29ஆயிரம் மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளியில் ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது," எனதமிழக வருவாய் துறை முதன்மை செயலர் ககன்தீப் சிங் பேடி கூறினார்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்து வரும் மின்
ஆளுமை திட்டப்பணிகளை தமிழக வருவாய் துறை முதன்மை செயலர் ககன்தீப் சிங் பேடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கலெக்டர் ராஜேஷ் முன்னிலையில் மின் ஆளுமை திட்டத்தின் கீழ் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்துறைசமூக நலத்துறைபள்ளிக்கல்வித்துறை மற்றும் நில அளவைத்துறைகளில் வழங்கப்படும் சான்றிதழ்கள் குறித்து ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்த பின் நிருபர்களிடம் கூறியதாவது:"வருவாய் துறையில் ஜாதிச்சான்றிதழ்கள்வருமான சான்றிதழ்கள்குடியிருப்பு சான்றிதழ்கள் ஆகியவை மக்கள் கணினி மையங்கள் மூலம் பொதுமக்கள் விண்ணப்பித்து பெறலாம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில்மின் ஆளுமை திட்டத்தின் கீழ் வருவாய் துறையில் லட்சத்து 92 ஆயிரத்து 430 சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.மக்கள் கணினி மையத்தில் பொதுமக்கள் சான்றிதழ் கோரி விண்ணப்பித்த உடன் வி...,க்கள்ஆர்..,கள் மற்றும் மண்டல துணை தாசில்தார்கள் ஆகியோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை ஆய்வு செய்து எலக்ட்ரானிக் கையொப்பம் இட்டு மீண்டும் மக்கள் கணினி மையத்திற்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.பள்ளிக்கல்வித்துறையில் ஆறாம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.ஸி.வகுப்பு வரை சாதிச்சான்றிதழ்கள் அந்தந்த பள்ளிகளில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. இது வரை29 ஆயிரம் மாணவமாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது." இவ்வாறு கூறினார்

No comments:

Post a Comment