* விண்ணப்பம் வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியீடு 3.5.13
* விண்ணப்பம் வினியோகம் ஆரம்பம் 4.5.13
* விண்ணப்பம் வழங்க, கடைசி நாள் 20.5.13
* பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள்
20.5.13
* "ரேண்டம்' எண் வெளியீடு 5.6.13
* "ரேங்க்' பட்டியல் வெளியிடும் தேதி 12.6.13
* மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்கும் நாள் 21.6.13
* கலந்தாய்வு முடியும் நாள் 30.7.13
விண்ணப்பம் வழங்கும் இடங்கள் மற்றும் சேர்க்கைஅட்டவணை தொடர்பான விவரங்கள் அனைத்தையும், www.annauniv.eduஎன்ற இணையதளத்தில் பார்க்கலாம். "நடப்பு கல்வி ஆண்டில், பொறியியல் படிப்பில் சேர்வதற்கானவிண்ணப்பங்கள், மே, 4ம் தேதி முதல், தமிழகம் முழுவதும், 59 மையங்களில்வழங்கப்படும்,'' என, அண்ணா பல்கலை துணைவேந்தர் காளிராஜ், நேற்றுமாலை, தெரிவித்தார். இந்த ஆண்டு, அரசு ஒதுக்கீட்டின் கீழ், 2 லட்சம் இடங்கள் இருப்பதாகவும், அவர் குறிப்பிட்டார்.பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் முடிந்து, தற்போது, சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள, "டேட்டா சென்டரில்', மதிப்பெண்களைதொகுக்கும் பணி, மும்முரமாக நடந்து வருகிறது. பிளஸ் 2 முடிக்கும்மாணவர்களின் முதல்,"சாய்ஸ்', பொறியியல் மற்றும் மருத்துவப்படிப்புகளாகத் தான் இருக்கின்றன. அதிலும், மருத்துவப் படிப்பிற்கு, "சீட்'கிடைக்கும் மாணவர்கள் கூட, கடைசி நேரத்தில், பொறியியல் கலந்தாய்வுக்கு வந்து விடுகின்றனர்.முன்னணி கல்லூரியில் படிப்பைமுடித்தால், கைமேல் வேலை, கை நிறைய சம்பளம் என்ற நிலைஇருப்பதால், மாணவர்கள், பொறியியல் படிப்பை, அதிகளவில் தேர்வுசெய்கின்றனர்.
துணைவேந்தர் அறிவிப்பு : நடப்பு ஆண்டிற்கான பொறியியல் சேர்க்கை குறித்த அறிவிப்புகளை,மாணவர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், ""மே, 4ம் தேதி முதல், பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள்வழங்கப்படும்,'' என, அண்ணா பல்கலை துணைவேந்தர் காளிராஜ், நேற்றுமாலை அறிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
பொறியியல் சேர்க்கை குறித்த அறிவிப்பு, மே, 3ம் தேதி வெளியிடப்படும்.மறுநாள், 4ம் தேதி முதல், 20ம் தேதி வரை, மாநிலம் முழுவதும், 59மையங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்படும். அரசு ஒதுக்கீட்டின் கீழ், 2லட்சம் இடங்கள் உள்ளன. எனவே, மாணவ, மாணவியருக்குத் தேவையான அளவில், 2 லட்சத்திற்கும் அதிகமாக விண்ணப்பங்களை அச்சடித்துஉள்ளோம்.விண்ணப்பங்களைப் பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களைஅனுப்பவும், மே, 20ம் தேதி கடைசி நாள். அன்று மாலைக்குள், பூர்த்தி செய்தவிண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். கலந்தாய்வு நடக்கும் தேதிவிவரங்கள், பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு காளிராஜ் கூறினார்.
9ம் தேதி, "ரிசல்ட்?'
மாநிலம் முழுவதும், அனைத்து அரசு பொறியியல் கல்லூரிகள், அண்ணாபல்கலையின் கீழ் இயங்கும் உறுப்பு கல்லூரிகளில், விண்ணப்பங்கள்வழங்கப்படும். மே,10ம் தேதிக்குள், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகிவிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக, மே, 9ம் தேதி வெளியாகவாய்ப்புகள் இருப்பதாகவும், துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல்வருக்கு பிடித்த எண், 9 என்பதாலும், அன்று, அமாவாசை என்பதாலும்,அன்றயை தேதியில், தேர்வு முடிவு வெளியாக வாய்ப்பு இருப்பதாகக்கூறப்படுகிறது. எனினும், மே, 10ம் தேதியோ அல்லது அதைஒட்டினாற்போலவோ, தேர்வு முடிவை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம் என,தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
"ஆன்-லைன்' விண்ணப்பமும் ஏற்பு:
விண்ணப்பத்தில், பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்களை பதிய வேண்டும். மே, 10ம்தேதிக்குள், தேர்வு முடிவு வெளியாகி விட்டால், அடுத்த, 10 நாட்களுக்குள், மாணவர்கள், விண்ணப்பங்களை அனுப்பி விடலாம். "ஆன்-லைன்' வழியாகவும், பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என, பல்கலைவட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்த முழுமையான விவரங்கள், மே, 3ம்தேதி வெளியாகும் அறிவிப்பில் பார்த்து, மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment