2013ம் ஆண்டு முதல் செல்பேசிகளுக்கான ரோமிங் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.
புதுதில்லியில் இன்று நடைபெற்ற இந்தியாவின் இணையதள ஆளுமை தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய கபில் சிபல், 2012ம் ஆண்டுக்கான தேசிய தொலைத் தொடர்பு கொள்கையில், செல்பேசிகளுக்கான ரோமிங் கட்டணத்தை 2013ஆம் ஆண்டு முதல் ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே, அடுத்த ஆண்டு முதல் ரோமிங் கட்டணம் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment