Saturday, 15 December 2012

அடுத்தவாரம் விஏஓ பணியிடங்களுக்கான கலந்தாய்வு: இம்மாத இறுதியில் குரூப் 1, குரூப் 2 முடிவு: நடராஜ்



                                      காலியாக விஏஓ பணியிடங்களுக்கான கலந்தாய்வு அடுத்த வாரம் தொடங்க இருப்பதாக தமிழ்நாடு தேர்வாணைய தலைவர் நடராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நவம்பர் 4ஆம் தேதி நடந்த குரூப் 2 தேர்வுகளுக்கான முடிவு இம்மாத இறுதியில் வெளியிடப்படும். குரூப் 1 தேர்வுகளுக்கான முடிவு இம்மாத இறுதியில் வெளியிடப்படும். தமிழ்நாடு
முழுவதும் காலியாக உள்ள 1770 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு அடுத்த வாரம் தொடங்கி இரண்டு வாரம் நடைபெற உள்ளது. டிஎன்பிஎஸ்சியில் நடப்பாண்டில் மட்டும் 24,450 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் 

No comments:

Post a Comment