அரசு கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் வெளிநாட்டு பல்கலைகழகங்களுக்கு செல்ல ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு உயர்கல்வி மன்றம், தென்னிந்திய பிரிட்டிஷ் கவுன்சில் இடையே இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. வெளிநாட்டு பல்கலைகழகங்களில் கல்வி மற்றும் ஆராய்ச்சி
மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த ஆண்டு 25 மாணவர்கள், 5 பேராசிரியர்கள் வெளிநாட்டில் பயிற்சி பெறுவர். ஒவ்வொரு மாணவர், பேராசிரியருக்கு ரூ.15 லட்சம் அனுமதித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment