Saturday, 15 December 2012

மாணவிகளுக்கு எதிரான குற்றங்களை தெரிவிக்க தனி செல்பேசி எண் வெளியீடு!



             நாமக்கல் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தெரிவிக்க மாவட்டக் காவல் துறை சார்பில் தனி அலைபேசி எண்கள் வெளியிடப்பட்டனபெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் 13.12.2012 அன்று நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டக் காவல் துறை சார்பில்நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்டக் காவல்
கண்காணிப்பாளர் பி.கண்ணம்மாள் கலந்து கொண்டு பேசினார்.குழந்தை தொழிலாளர்கள், இளம் வயது திருமணத்திற்கு உள்ளாகும் பெண்கள், பெண்களைக் கடத்தல், காதலுக்காக வீட்டை விட்டு வெளியேறுதல், பாலியல் பலாத்காரம் போன்றவற்றால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அவற்றைத் தடுப்பது குறித்தும் மாவட்டக் கண்காணிப்பாளர் மாவிகளிடம் விளக்கினார்
              மேலும், பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு தொல்லை தரும் நபர்கள் குறித்த தகவல்களை 94454 91488 என்ற காவல் கண்காணிப்பாளரின் அலைபேசி எண்ணுக்கும், 9443439141 என்ற ஆள்கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் எண்ணுக்கும், 9842943581 என்ற ஆட்கடத்தல் தடுப்பு உதவி ஆய்வாளர் எண்ணுக்கும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இந்த எண்ணில் மாணவர்கள் தெரிவிக்கும் தகவல்கள், நபர்கள் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அவர் மாணவிகளிடம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment