Saturday 23 February 2013

குரூப்-2 தேறியவர்களுக்கான நேர்முகத்தேர்வு தொடக்கம்


            குரூப்-2 நேர்முகத் தேர்வு, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், துவங்கியது. நகராட்சி கமிஷனர், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர், சார்பதிவாளர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள, 3,631 பணியிடங்களை நிரப்ப, கடந்த நவ., மாதம் குரூப்-2 தேர்வு நடந்தது. இதன் முடிவுகள்,
சமீபத்தில் வெளியிடப்பட்டன. மொத்த இடங்களில், 1,426 இடங்கள், நேர்முகத் தேர்வை உள்ளடக்கிய தேர்வாகும். மீதமுள்ள பணியிடங்கள், நேர்முகத்தேர்வு அல்லாத பணியிடங்கள். முதல்கட்டமாக, 1,426 பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வு, நேற்று தேர்வாணையத்தில் துவங்கியதுஇதற்கு, 2,852 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். ஒரு நாளைக்கு, 450 பேர் வீதம், மார்ச், 1 வரை, தொடர்ந்து நேர்முகத் தேர்வு நடக்கிறது.

No comments:

Post a Comment