Thursday 25 October 2012

மாவட்ட கல்வி அலுவலர்: 55 பணியிடங்கள் காலி-


                                                                                                                                                                               தமிழகத்தில் காலியாக உள்ள 55 மாவட்ட கல்வி   அலுவலர்கள் (டி...,)பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.பள்ளி கல்வி துறையில்,மாவட்ட கல்வி அலுவலர்களின் பணிகள் முக்கியம்முப்பருவ கல்வி முறையில்முழுமையான தொடர் கல்வி மதிப்பீடுமாணவர்களுக்கான 14 வகை விலையில்லாபொருட்கள் வழங்குவதுபள்ளி ஆண்டாய்வுகல்வி தரம் ஆய்வுபொது தேர்வுகள்,தனியார் பள்ளிகளுக்கான ஆசிரியர் பணி நியமனங்கள் மற்றும் 
சம்பளம் வழங்கலுக்கானஒப்புதல் போன்ற பணிகளில் டி...,க்களின் பங்கு  குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் வரை மாநிலத்தில் 27 டி..., பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில்,பணிமூப்பு பட்டியல் அடிப்படையில் 32 பேருக்கு சி...,க்கள் பதவி உயர்வுஅளிக்கப்பட்டபின்தற்போது 55 பணியிடங்கள் வரை காலியாக உள்ளனகுறிப்பாகதேனி(தொடக்க கல்வி), மதுரை (மெட்ரிக் ஆய்வாளர்), தேவகோட்டை போன்ற 55 இடங்களில்டி..., பணியிடங்கள் காலியாக உள்ளனஐம்பது ஆண்டுகளாக காலியாக இருந்த உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிதலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்பிய பள்ளி கல்வி துறை அதிகாரிகளுக்குஆசிரியர்கள் மத்தியில் வரவேற்புள்ளதுபதவி உயர்வுக்கு தகுதியாகியும்ஓய்வு பெறும்சூழ்நிலையிலும் உள்ள தலைமையாசிரியர்களுக்கு டி...,க்கள் பதவி  உயர்வு அளித்துகாலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று ஆசிரியர்கள்  எதிர்பார்க்கின்றனர்.
தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கப் பொதுச்செயலாளர் சாமி சத்தியமூர்த்தி கூறுகையில்,"டி...,க்களுக்கான பணிமூப்பு பட்டியல்1.1.2012ல் தயாரித்துகல்வி துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுஅது கிடப்பில் உள்ளது.நிர்வாக ரீதியாகவும்அரசு அறிவித்துள்ள திட்டங்கள் மாணவர்களை முழுமையாகசென்றடையவும்காலியான டி...,க்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும்என்றார்.

No comments:

Post a Comment