Tuesday, 9 October 2012

கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு மாதிரி வினா-விடை



              கல்வியில் பின்தங்கிய, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, பள்ளி கல்வித்துறை மூலம், மாதிரி வினா - விடை அடங்கிய புத்தகம், தமிழகத்தில் முதல் முறையாக, கோவை வருவாய் மாவட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
                    தமிழகத்தில், நடந்து முடிந்த காலாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில், கல்வியில் பின்தங்கிய
மாணவர்களுக்கு, காலை, மாலை நேரங்களில் சிறப்பு பயிற்சி அளிக்க, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கல்வியில் பின்தங்கியுள்ள, பொதுத் தேர்வு மாணவர்களுக்காக, "குறைந்தபட்ச கற்றல் பயிற்சி என்ற மாதிரி வினா - விடை புத்தகம், பள்ளிக்கல்வி துறையால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
       ஆசிரியர்கள் மூலம் தயாரிக்கப்பட்ட, வினா - விடை தொகுப்புகளில் இருந்து, கோவை, ஈரோடு, திருச்சி, நாமக்கல், தஞ்சை மாவட்ட ஆசிரியர்கள் குழுவினர், முக்கிய வினாக்கள் தெரிவு செய்து, இந்த புத்தகம் தொகுக்கப்பட்டுள்ளது. இறுதி செய்யப்பட்ட தொகுப்பை, அந்தந்த மாவட்டத்தில் உள்ள முன்னணி கல்வி நிறுவனத்தின் உதவியுடன், புத்தமாக அச்சடிப்பட்டு, மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியாக, புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது.
         கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் கூறியதாவது: அரசு பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி எட்டும் வகையில், கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு மட்டும், இப்புத்தகம் வழங்கப்படுகிறது. பள்ளிகளில், 20% மாணவர்கள் பின்தங்கியுள்ளதாக கணக்கிடப்பட்டு, அதற்கேற்ப புத்தகம் அச்சிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், கோவை மாவட்டத்தில் தான், முதல்முறையாக இந்த வினா - விடை புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment