Sunday, 7 October 2012

பிற்பட்ட / மிகவும் பிற்பட்ட மாணவர்களுக்கு இலவச ஆங்கிலப் பயிற்சி - முதல்வர் உத்தரவு



பிற்படுத்தப்பட், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுப்பயிற்சி அளிக்க உள்ளது.
இதற்காக தமிழகத்தில் 160 விடுதிகளில் 6,550 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தலா ரூ 2,800 வீதம் ரூ.1.83 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, ஆங்கிலப்பேச்சு பயிற்சி அளிக்கப்படவுள்ளதுமேலும் சிறுபான்மையின மாணவர்களில் 10- ம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசுத்தொகை இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment