Wednesday 8 May 2013

கூடுதலாக 20 பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி?



                      தமிழகத்தில் தற்போது 552 பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகள் உள்ளன. நடப்புக் கல்வியாண்டில் புதிய கல்லூரிகள் தொடங்க அனுமதி கோரி தமிழகத்தில் இருந்து 40-க்கும் மேற்பட்டோர் அகில இந்திய
கல்வி கவுன்சிலில் (ஏஐசிடிஇ) விண்ணப்பித்துள்ளனர். இதில் 10 முதல் 20 விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, நடப்புக் கல்வியாண்டில் 20 புதிய கல்லூரிகள் தொடங்க வாய்ப்புள்ளது. இதனால், அரசு ஒதுக்கீட்டிலான பி.. இடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என சென்னை அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
                பொறியியல் கலந்தாய்வு குறித்த மேலும் விவரங்களை அறியwww.annauniv.edutnea2013 என்ற இணைய தளத்தைக் காணலாம். அல்லது 044 - 22358265, 22358266, 22358267 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment