Saturday 29 September 2012

7% அகவிலைப்படி உயர்வு: தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தல்


                 மத்திய அரசு போல மாநில அரசும் ஆசிரியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படியை உயர்த்தித் தரவேண்டும், என தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
                தமிழ்நாடு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மதுரை மாவட்ட செயலாளர் எஸ்.பாஸ்கரன் கூறியதாவது: எப்போதெல்லாம் மத்திய
அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படி உயர்த்தப்படுகிறதோ, அப்போதெல்லாம், மாநில அரசும் உயர்த்தி வழங்கும்சமீபத்தில் மத்திய அரசு, 7% அகவிலைப்படி உயர்வை அறிவித்து, 65% அகவிலைப்படியை 72 சதவீதமாக்கியுள்ளது. அதேபோல மாநில அரசும் வழங்க வேண்டும். மேலும் இதில், 50% அடிப்படை சம்பளத்துடன் இணைத்து அறிவிக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment