Thursday 27 September 2012

திறந்தநிலை பல்கலை. பி.எட். நுழைவுத் தேர்வு தள்ளிவைப்பு



         தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பி.எட். (சிறப்புக் கல்வி) நுழைவுத் தேர்வு அக்டோபர் 21-ம் தேதிக்கு (ஞாயிற்றுக்கிழமை) தள்ளிவைக்கப்படுவதாக பல்கலைக்கழகப் பதிவாளர் கி.முருகன் அறிவித்துள்ளார்.
திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பி.எட். நுழைவுத் தேர்வு
அக்டோபர் 14-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
        இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு அக்டோபர் 14-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று நுழைவுத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment