Saturday 1 September 2012

டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 7, 8 தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப் போவதாக, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.


     டி..டி., தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 7, 8 தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப் போவதாக, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நான்கு மண்டலங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடக்கும்.இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்ற, 713 பேருக்கு, 7ம்
தேதியும்; முதல் தாளில் தேர்ச்சி பெற்ற, 1,735 பேருக்கு, 8ம் தேதியும், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும்

இதற்கான அழைப்புக் கடிதம், அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது; டி.ஆர்.பி., இணையதளத்திலும், வெளியிடப்பட்டுள்ளது. கடிதம் கிடைக்காதோர், இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்ட அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்து, சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம்.

No comments:

Post a Comment