Saturday 1 September 2012

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு: விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க செப்.7 வரை கால நீட்டிப்பு


         தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர் 7-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கல்வி உதவித் தொகை பெறும் மாணவர்களைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 18-ம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தேசிய திறனாய்வுத் தேர்வு நடைபெறுகிறது.பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை சென்னை, திருச்சி, மதுரை, கோவை, கடலூர், வேலூர் ஆகிய இடங்களில் உள்ள அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களில் செப்டம்பர் 7-ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம்.

No comments:

Post a Comment