Tuesday 11 September 2012

(டி.இ.டி.,) சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வராதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு




                   மதுரையில் தென் மாவட்டங்களில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்காக நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பில் 11 பேர் "ஆப்சென்ட்" ஆயினர்.  மதுரை உட்பட 9 மாவட்டங்களில், ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி மதுரையில் நடந்தது. ஆசிரியர் தேர்வு வாரிய இணை
இயக்குனர் சேதுராம வர்மா தலைமை வகித்தார். மதுரை சி..., நாகராஜ முருகன் உட்பட அனைத்து மாவட்ட சி...,க்கள் பங்கேற்றனர்.
                           9 மாவட்டங்களில் இருந்தும் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பங்கேற்றனர்.சேதுராம வர்மா கூறுகையில், "மதுரையில் 2 நாட்கள் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் 544 பேர் பங்கேற்றனர். 11 பேர் "ஆப்சென்ட்" ஆகியுள்ளனர். "ஆப்சென்ட்" ஆனவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment