Wednesday 5 September 2012

ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்து அந்த தேர்வினை எழுதாதவர்கள் மறு தேர்வினை எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்


 அடுத்த மாதம் (அக்டோபர்) 3-ந் தேதி மறுதேர்வு நடத்தப்படுகிறது. தேர்ச்சி பெறாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பதற்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்விற்கு 3 மணிநேரம் கால அவகாசம் கொடுக்கப்படுகிறதுதேர்வு கட்டணம் செலுத்த தேவை இல்லை என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
                ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்து தேர்ச்சி பெறாதவர்கள் அனைவரும்  மறுதேர்வை எழுதலாம்.விண்ணப்பித்துவிட்டு தேர்வு எழுதாதவர்கள் மறுதேர்வை எழுத இயலாது. மறுதேர்விற்கான ஏற்பாடுகளை தேர்வு வாரியம் விரிவாக செய்து வருகிறது. தேர்வுக்கான ஹால் டிக்கெட் அடுத்த வாரத்தில் இருந்து வினியோகம் செய்யப்படுகிறதுஅவரவர் வீட்டிற்கு ஹால் டிக்கெட் தபால் மூலம் அனுப்பப்படுகிறது. ஹால் டிக்கெட்  கிடைக்கப் பெறாதவர்கள் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்  என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment