Sunday 11 November 2012

அரையாண்டு தேர்வுகளை டிச.23க்குள் முடிக்க வேண்டும் கிறிஸ்தவ நீதிப்பேரவை கோரிக்கை



                       கிறிஸ்தவ நீதிப்பேரவை பொதுச்செயலாளர் ஜான் பிரான்சிஸ், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: ஒவ்வொரு கல்வியாண்டிலும் மாணவ, மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 23ம் தேதிக்குள் முடிக்கப்பட்டு, புத்தாண்டின் முதல் ஞாயிறு வரை விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். இந்த கல்வியாண்டில் வழக்கத்திற்கு மாறாக, விடுமுறை நாட்களான டிசம்பர்
கடைசி வாரத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்களுக்கு இடையூறாக, தேர்வுகளை நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இது மாணவ, மாணவிகள் மத்தியிலும், சிறுபான்மை மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
        எனவே இந்த வருடம் டிசம்பர் 23ம் தேதிக்குள் அனைத்து தேர்வுகளையும் முடித்து ஜனவரி மாதம் முதல் ஞாயிறு வரை விடுமுறை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment