பள்ளிக்கல்வி துறை சார்பில் சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா நேற்று நடந்தது. பள்ளி கல்வி இயக்குனர் தேவராஜன் வரவேற்றார். பள்ளிக்கல்வி துறை செயலர் சபிதா தலைமை தாங்கினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி அமைச்சர் சிவபதி பேசுகையில், தமிழகம் கல்வியில் சிறந்து விளங்க எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு 15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்குள் 59 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என்றார்.
No comments:
Post a Comment