Saturday 10 November 2012

குரூப்-4 ‌தேர்வு: நவம்பர் 18ம தேதி கலந்தாய்வு



         ஜூலையில் நடந்த, குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, இம்மாதம், 18ம் தேதி முதல், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், கலந்தாய்வு நடக்கும் என, தேர்வாணைய தலைவர் நடராஜ் கூறினார். தேர்வாணையம், தட்டச்சர், சுருக்கெழுத்தர், இளநிலை உதவியாளர் உள்பட, குரூப்-4 நிலையில், 10 ஆயிரத்து 793 காலி பணியிடங்களை நிரப்ப, ஜூலை, 7ம் தேதி, போட்டித் தேர்வை நடத்தியது. 12.33 லட்சம் பேர் விண்ணப்பம் செய்ததில், 10 லட்சம் பேர்,
தேர்வில் பங்கேற்றனர்.
         இதன் முடிவுகள், சமீபத்தில் வெளியிடப்பட்டன. இந்நிலையில், சென்னையில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடராஜ் கூறுகையில், குரூப்-4 தேர்வில், தேர்வு பெற்றவர்களுக்கு, 18ம் தேதி முதல், தேர்வாணைய அலுவலகத்தில் கலந்தாய்வு நடக்கும். குரூப்-1 முக்கியத் தேர்வின் முடிவு, விரைவில் வெளியிடப்படும்' என, நிருபர்களிடம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment