அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) மூலம் கர்நாடகா கம்பெனிக்கு அனுப்பிய ரூ.2 ஆயிரத்துக்கான "டிடி'க்கள் அனைத்தும் பள்ளிகளுக்கும் திரும்பி வந்து சேர்ந்தது. கற்றல் உபகரணங்கள் வாங்குவதற்காக கர்நாடகாவில் உள்ள "லியோ லிட்டரேச்சர் அன்ட் சில்ட்ரன் மெட்டீரியல்ஸ்' என்ற நிறுவனத்துக்கு, எஸ்.எஸ்.ஏ., திட்ட நிதியில் இருந்து ரூ.2 ஆயிரத்துக்கான "டிடி'க்கள் எடுத்து
அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து கற்றல் உபகரணங்கள் வாங்கும் முயற்சி கைவிடப்பட்டது.இதற்காக, ஒவ்வொரு பள்ளிகளில் இருந்தும் அனுப்பப்பட்ட "டிடி'க்கள், மீண்டும் அதே பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று எஸ்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment