Sunday 24 March 2013

பள்ளி கல்வி துறையில் 100 பேருக்கு பதவி உயர்வு



             பள்ளி கல்வித் துறையில், இருக்கை கண்காணிப்பாளர்கள், 100 பேர், கண்காணிப்பாளர்களாக, நேற்று பதவி உயர்வு செய்யப்பட்டனர். மாவட்ட கல்வி அலுவலகங்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களில், இருக்கை கண்காணிப்பாளர்களாக, பணியாற்றி
வருபவர்களில், பணிமூப்பு அடிப்படையில், 100 பேர், கண்காணிப்பாளர்களாக, நேற்று பதவி உயர்வு செய்யப்பட்டனர்இதற்கான கலந்தாய்வு, "ஆன்-லைன்" முறையில், நடந்தது. துறை இணை இயக்குனர் கண்ணப்பன் கையெழுத்திட்ட உத்தரவு கடிதங்கள், உடனுக்குடன், ஆன்-லைன் மூலம், சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில், பதிவிறக்கம் செய்து வழங்கப்பட்டனஇதைத் தொடர்ந்து, உதவியாளர்களாக இருப்பவர்களில், 100 பேர், இருக்கை கண்காணிப்பாளர்களாக, பதவி உயர்வு செய்யப்படுவர் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment