தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் உயர்நிலைப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள தலைமையாசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பும்
பொருட்டு 01.01.2013 நிலவரப்படி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு தகுதியுள்ள 30 உதவி/ கூடுதல் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களின் பெயர்பட்டியலை 2013-2014ஆம் கல்வியாண்டு பதவியுயர்வு மூலம் நியமனம் செய்ய விவரம் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் தொடர்ந்து பணியாற்றும் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களின் (31.12.2013 முடிய) விவரங்களை உரிய படிவங்களில் பூர்த்தி செய்து அனுப்ப மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
No comments:
Post a Comment