Friday 11 January 2013

தொலைதூர கல்வி வழியாக பொறியியல் படிப்புக்கு அனுமதி.



                      பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்புகளை தொலைதூர கல்வி முறையில் படிப்பதற்கு விரைவில் அனுமதி வழங்கப்பட உள்ளது.இப்படிப்புக்கு மாணவர்கள் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப் படிப்பு அல்லது பட்டயப் படிப்பு கல்லூரியில் பயின்றிருக்க வேண்டும். மேலும்
குறைந்தபட்சம் 5 வருட பணி அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே தொலைதூர கல்வி முறையில் பயில முடியும். தொலைதூர கல்வி முறையில் பயிற்றுவிக்கப்பட்டாலும் பயிற்சிகளுக்கு நேரடியாக வரவேண்டும். மேலும் இறுதியில் தேசிய தகுதித் தேர்வும் நடத்தப்படும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமத்தின் தலைவர் மண்தா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment