Monday 21 January 2013

பொதுத் தேர்வு முடியும் வரை விடுப்பு அளிக்கக்கூடாது பள்ளிக்கல்வித்துறை உத்தரவு



            சமீபத்தில் நடந்த தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் அரசு பொதுத் தேர்வு முடியும் வரை ஆசிரியர்களுக்கு விடுப்பு கொடுக்க கூடாது என கல்வித்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதை வாபஸ் பெற வேண்டும் என நெல்லை மாவட்ட முதுநிலை பட்டதாரி
ஆசிரியர் சங்க பொ துக்குழு கூட்டம் வலியுறுத்தியுள்ளது. தங்களுக்கு வேண்டப்படாத ஆசிரியர்களை பல தலைமை ஆசிரியர்கள் மிரட்டும் நிலை ஏற்படலாம். அடிப்படை உரிமையை பறிக்கும் உத்தரவை வாபஸ் பெற வேண்டும் எனவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

No comments:

Post a Comment