Tuesday 19 March 2013

புதிதாக 20 ஐ.ஐ.ஐ.டி.,கள்: மக்களவையில் மசோதா தாக்கல்



                  தற்போதுள்ள, நான்கு, ...டி.,களுடன், மேலும், 20, இந்திய தகவல் தொழில்நுட்ப கல்வி கழகங்களை துவக்க வகை செய்யும், மசோதா நேற்று, லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. காஞ்சிபுரம், குவாலியர், அலகாபாத் மற்றும்
ஜபல்பூரில், இந்திய தகவல் தொழில்நுட்ப கல்வி கழகங்கள் உள்ளன. அவற்றை, தாய் அமைப்புகளாகக் கொண்டு, மேலும், 20 இடங்களில், கூடுதல், தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை துவக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான மசோதாவை நேற்று, லோக்சபாவில் தாக்கல் செய்த, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், பல்லம் ராஜு, "தகவல் தொழில்நுட்பத்தில், உலகத்தர மனித வளத்தை உருவாக்குவதற்கான முயற்சி இது" எனக் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment