முதுமலை கார்குடியில் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. முதுமலை புலிகள் காப்பகம் கார்குடியில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் அனைத்து
மாணவர்களும், பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள். இப்பள்ளியில் பயிலும் 5ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு உடல் ஆரோக்கியதுக்கும், மன மாற்றத்துகும், பல்வேறு விளையாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதில், மாலை நேரத்தில் அளிக்கப்படும் கைப்பந்து பயிற்சி அவர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உடற்கல்வி ஆசிரியர்கள் கூறுகையில், "பழங்குடி மாணவர்களிடம், மனமாற்றம், உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, விளையாட்டிலும் ஆர்வத்தை ஏற்படுத்த பல்வேறு விளையாட்டு பயிற்சிகளை தற்போது அளித்து வருகிறோம்" என்றனர்.
No comments:
Post a Comment