Saturday 5 January 2013

குரூப்-2 தேர்வில் நிரம்பாத இடங்களுக்கு கலந்தாய்வு: டி.என்.பி.எஸ்.சி.



                            குரூப்-2 தேர்வில், நிரம்பாமல் உள்ள, 630 இடங்களை நிரப்ப, 7ம் தேதி, மீண்டும் கலந்தாய்வு நடக்கும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. சம்பந்தபட்ட தேர்வர்கள், இணையதளத்தில் உள்ள, அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்து, கலந்தாய்வில் பங்கேற்கலாம்இதுதொடர்பாக தேர்வாணைய செயலர் விஜயகுமார்
வெளியிட்டுள்ள  அறிவிப்பு: குரூப்-2 தேர்வில், நேர்காணல் அல்லாத, 3,171 விண்ணப்பதாரர்களை தேர்வு செய்ய, கடந்த நவம்பர், டிசம்பரில், பணி நியமன கலந்தாய்வு நடந்தது. இதில், 2,541பேர் மட்டும் பங்கேற்று, பல பணிகளுக்கு, நியமன உத்தரவுகளை பெற்றனர். இன்னும், 630 இடங்கள், நிரப்பப்படாமல் உள்ளன. இதற்கு, தகுதியான தேர்வர்களை, தேர்வு செய்வதற்காக, இம்மாதம், 7ம் தேதி, தேர்வாணைய அலுவலகத்தில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. தகுதிவாய்ந்த தேர்வுதாரர்களின் பெயர் பட்டியல், தேர்வாணையத்தின், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.சம்பந்தபட்ட தேர்வர்கள், இணையதளத்தில் உள்ள, அழைப்பு கடிதத்தைபதிவிறக்கம் செய்து, கலந்தாய்வில் பங்கேற்கலாம். இவ்வாறு செயலர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment