மதுரையில், சி.ஏ., தேர்வுக்கான இலவச பயிற்சி மையம், மார்ச் 20 முதல் செயல்பட உள்ளது. பட்டய கணக்கர் (சி.ஏ.,) படிப்பிற்கு தேர்வு நடத்தி, ஆடிட்டர் அங்கீகாரம் கொடுக்கும் "இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் ஆப் இந்தியா (ஐ.சி.ஏ.ஐ.,)" அமைப்பின் தலைமை அலுவலகம்,
டில்லியில் உள்ளது; கிளை அலுவலகங்கள், சென்னை, கோவை, மதுரையில் உள்ளன. தென் மாவட்டங்களில், சி.ஏ., படிப்பதற்கு, அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி மையம் இல்லை. அதிக கட்டணத்தில் பயிற்சி வழங்கும், மையங்கள், சில நகரங்களில் உள்ளன. இந்நிலையில், சி.ஏ., படிக்க விரும்பும் மாணவர்களுக்கு, ஐ.சி.ஏ.ஐ., மதுரை கிளையில், சேர்க்கை கட்டணத்துடன், இலவச பயிற்சி மையம் துவக்கப்பட உள்ளது. மார்ச் 20ம் தேதி துவங்கும் மையத்தில், புத்தகங்கள், வழிகாட்டுதல்கள் கிடைக்கும். இந்த அமைப்பின் உறுப்பினர்கள் பயிற்சி அளிப்பர். ஐ.சி.ஏ.ஐ., மதுரை கிளை, தலைவர் ஜெகதீசன் கூறியதாவது: தென் மாவட்டங்களில், முதன் முதலாக, சி.ஏ., தேர்வுகளுக்கு பயிற்சி மையம் துவக்குகிறோம். பி.காம்., முடித்தவர்கள் மட்டுமின்றி, வேறு பாடத்தில் டிகிரி முடித்தவர்களும், சி.ஏ., படிக்கலாம். சி.ஏ., படிப்பதற்கு "ஆன்-லைனில்" விண்ணப்பித்து, சென்னையில் பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை மாற்றப்பட்டு உள்ளது. இனி, மதுரை கிளை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம், என்றார். முகவரி: ஐ.சி.ஏ.ஐ., பழைய நத்தம் ரோடு, விசாலாட்சிபுரம், மதுரை. போன்: 98652 54234, 0452-234 3920.
No comments:
Post a Comment