Sunday, 3 March 2013

உதவி பொறியாளர் தேர்வு: 52 ஆயிரம் பேர் பங்கேற்பு


           பொதுப் பணித்துறையில், 154 உதவி பொறியாளர்களை நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., நேற்று நடத்தியது. இதில், 52 ஆயிரம் பேர் பங்கேற்றனர். பொதுப்பணித்துறை, எலெக்ட்ரிக்கல் பிரிவில், 28 பணியிடங்கள்; ஊரக வளர்ச்சித்
துறை, சிவில் பிரிவில், 18 இடங்கள்; தொழிற்சாலை உதவி ஆய்வாளர் பதவியில், 13 இடங்கள் உட்பட, 223 பணியிடங்களுக்கு, நேற்று தேர்வுகள் நடந்தன. இதில், 52 ஆயிரம் பேர் பங்கேற்றனர். சென்னையில், 18 ஆயிரம் பேர் எழுதினர். மொத்தம், 300 மதிப்பெண்களுக்கு, எழுத்து தேர்வு நடந்தது. இதன் பின், 40 மதிப்பெண்களுக்கு, நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இரண்டிலும், தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment