Saturday 26 October 2013

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்ளுக்கான கூடுதல் பட்டியல் சான்றிதழ் சரிபார்ப்பு நவம்பர் 5, 6-ஆம் தேதிகளில் நடைபெறும் ?


             முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்காக 212 தேர்வர்கள் அடங்கியகூடுதல் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வகுப்பு வாரியாக ஒரே கட்-ஆஃப்மதிப்பெண் பெற்றவர்களையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்க
வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்துமொத்தம் 212பேர் அடங்கிய பட்டியலை ஆசிரியர்தேர்வு வாரியம் வியாழக்கிழமை இரவு வெளியிட்டது. இவர்கள் அனைவருக்கும் நவம்பர் 5, 6-ஆம் தேதிகளில் சென்னையில் சான்றிதழ்சரிபார்ப்பு நடைபெறும் எனத் தெரிகிறது. சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் இடம்நேரம் ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர்தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

                         2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. தமிழ் பாடம் தவிர மீதமுள்ள பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் 7-ஆம்தேதி வெளியிடப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்களின் பட்டியல் அக்டோபர் 11-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வு முடிவுகளை வெளியிடவும் உயர் நீதிமன்றமதுரை கிளை தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment