Monday 28 October 2013

தீபாவளி பண்டிகையின்போது விபத்தில்லாமல் பட்டாசு வெடிக்க மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை


             தீபாவளி பண்டிகையின் போது விபத்தில்லாமல் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க ஆசிரியர்கள்மாணவர்களுக்கு அறிவுரை வழங்கவேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
பள்ளிகளுக்கு சுற்றறிக்கை
                       தீபாவளி 2-ந்தேதி (சனிக்கிழமை) வருகிறது. அன்று
பெரும்பாலும் வெடிபட்டாசு வெடிப்பவர்கள் சிறுவர்கள்வாலிபர்கள்தான் அதிகம். குறிப்பாக பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவிகள்தான். எனவே பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்து மாணவர்களிடம் ஆசிரியர்கள் எடுத்து கூறவேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அவர்கள் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அந்த சுற்றறிக்கையின்படி பள்ளிக்கூடங்களில் காலை நேரத்தில் நடைபெறும் இறைவணக்க கூட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் மாணவர்-மாணவிகளுக்கு பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது பற்றி எடுத்துக்கூறுவார். பின்னர் வகுப்பறையிலும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தக்க அறிவுரை வழங்குவார்கள்.
சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ள விவரம் வருமாறு:-
பாட்டில்களில் பட்டாசு வைத்து வெடிக்காதீர்கள்
*பட்டாசுகளை கொளுத்தும்போது தளர்வான ஆடைகள் உடுத்தாதீர்கள். இறுக்கமான ஆடைகளை அணியுங்கள். டெரிகாட்டான்டெர்லின் ஆகிய எளிதில் பற்றக்கூடிய ஆடைகளை அணியக்கூடாது
* பட்டாசு கொளுத்தும்போது அருகில் வாளி நிறைய தண்ணீர் வைத்துக்கொள்ளவேண்டும்.
*பட்டாசுக்களை கொளுத்தி கையில் வைத்துக்கொண்டோ அல்லது உடம்புக்கு அருகாமையிலோ வெடிக்கவேண்டாம். மாறாக பாதுகாப்பாக தொலைவில் வைத்து வெடியுங்கள்.
* மூடிய பெட்டிகளில் பாட்டில்களில் பட்டாசுகளை உள்ளிட்டு கொளுத்தி வெடிக்காதீர்கள்.
* ராக்கெட்டுகளை வெட்ட வெளியில் குடிசைகள் இல்லாத பகுதிகளில் மட்டுமே செலுத்துங்கள்.
*பட்டாசுகளை விற்பனை செய்யும் கடைகள் முன்பாகவோ அருகிலோ வெடிக்காதீர்கள்.
பெற்றோர் முன்னிலையில்...
*பெற்றோர்கள் முன்னிலையில் பட்டாசுகளை வெடியுங்கள்.
*விவரம் அறியாத சிறுவர்களை பட்டாசு வெடிக்க அனுமதிக்காதீர்கள்.

இந்த பாதுகாப்பு விதிமுறைகளை மாணவர்களிடம் ஆசிரியர்கள் கூறி பள்ளிக்கூடங்களில் செயல்முறையில் பட்டாசு வெடித்தும் காட்டலாம். தினம் தோறும் செய்து காண்பியுங்கள். இவ்வாறு சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment