Saturday 26 October 2013

செஸ் விளையாட்டை ஊக்குவிக்கும் அரசின் சிறப்பு திட்ட;ம்: அரசு பள்ளி மாணவர்கள் ஏமாற்றம் ஆசிரியர்கள் ஆதங்கம்


           ஊட்டி "செஸ்விளையாட்டை ஊக்கவிக்கும்மாநில அரசின் சிறப்பு திட்டம்அரசு பள்ளி மாணவமாணவியருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநில அரசுபள்ளிகளில் செஸ் விளையாட்டை ஊக்குவிக்க,மாநில அளவிலான செஸ் போட்டி நடத்த உள்ளது;முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட உள்ளது. அதற்காகமாவட்டந்தோறும்கல்வி
மாவட்டமாவட்டமண்டல அளவில் போட்டிகள் நடத்தப்பட்டனமாநிலம் முழுக்க உள்ள மாவட்டங்கள்16 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும் 24 மாணவமாணவியர் வீதம்மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  சமீபத்தில் நடந்து முடிந்த மண்டல அளவிலான போட்டிகளில்,அரசுஊராட்சி ஒன்றியஉதவி பெறும் மற்றும் மெட்ரிக்.பள்ளி மாணவமாணவியர் பங்கேற்றனர். பெரும்பாலான மாவட்டங்களில்அரசு பள்ளி மாணவமாணவியரை பின்னுக்கு தள்ளிமெட்ரிக்.மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவமாணவியர் வெற்றி பெற்றுள்ளனர்.ஆசிரியர்கள் ஆதங்கம்:அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:"பணக்கார விளையாட்டுஎனப்படும் செஸ் விளையாட்டைமெட்ரிக்.மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவமாணவியர் வீடுகளிலேயே விளையாடுகின்றனர்பல மாணவர்கள் ஆங்காங்கே உள்ள பயிற்சி மையங்களுக்கு சென்றுஅதிகபட்சம் மாதம் 8,000 ரூபாய் வரை கட்டணம் செலுத்திபயிற்சி பெறுகின்றனர். விளையாடும் போது, "டைமர்உபகரணம் வைத்துசர்வதேச விதிகளுக்கு உட்பட்டுவிளையாடுகின்றனர். மாறாககிராமப்புற அரசுஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் படிக்கும் ஏழைஎளிய குடும்பத்தை சேர்ந்த மாணவமாணவியருக்குசெஸ் விளையாட்டு என்பது புதிது;அவர்களில் பலர் செஸ் விளையாடினாலும், "டைமர்இல்லாமல், விதிமுறைகள் குறித்து தெளிவான அறிவு இல்லாமல் தான் விளையாடுகின்றனர். சமீபத்தில் நடந்த மண்டல அளவிலான போட்டிகளில்அரசு பள்ளி மாணவர்கள்மெட்ரிக்.பள்ளி மாணவர்களுடன் மோதினர். மெட்ரிக்.பள்ளி மாணவமாணவியர்
                      "டைமர்வைத்துநுட்பத்துடன் விளையாடிதை பார்த்துஅரசு பள்ளி மாணவர்கள் பயந்துநிலை குலைந்து போயினர். மெட்ரிக்.மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவமாணவியருக்கு இணையான திறமையை அரசு பள்ளி மாணவமாணவியரும் பெற வேண்டும் என்ற நோக்கில் அறிவிக்கப்பட்ட மாநில அரசின் சிறப்பு திட்டம்அரசு பள்ளி மாணவர்களுக்கு முழு பயனைஅளிக்கவில்லை.இவ்வாறுஆசிரியர்கள் கூறினர்.

                        செஸ் போர்டு எங்கே?"மாநில அரசின் இச்சிறப்பு திட்டத்தின் கீழ்,ஒவ்வொரு அரசுஊராட்சி ஒன்றியஉதவி பெறும் பள்ளிகளுக்கு,தலா 900 ரூபாய் வீதம் ஒதுக்கப்பட்டுஅதில் 9 செஸ் பலகைகள் வாங்கப்பட வேண்டும்பள்ளிகள் தோறும் "செஸ் கிளப்'உருவாக்கப்பட வேண்டும்எனஅரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை,பெரும்பாலான பள்ளிகளுக்கு ஒரே ஒரு செஸ் பலகை மட்டுமே வழங்கப்பட்டுள்ளதுபல பள்ளிகளில் செஸ் கிளப்புகள் துவங்கப்படவில்லை. எனவேஇச்சிறப்பு திட்டத்தில் உள்ள குறைகளை களையமாநில அரசு முன்வர வேண்டும்.

No comments:

Post a Comment