Saturday 26 October 2013

இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு எதிர்த்து விரைவில் கூட்டுப் போராட்டம்



        இன்று சென்னை, திருவல்ல்கேணி, மாஸ்டர் மாளிகையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியுடன் இணைந்து போராட தயாராக உள்ளதாக
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மற்றும் தமிழக ஆரம்ப்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆகிய இயக்ககங்கள் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து உரிய முடிவுகளை மேற்கொள்ள இன்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, கூட்டுப் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்த இயக்ககங்களுடன் பேச பொதுச் செயலாளருக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதையடுத்து விரைவில் தொடக்கக்கல்வித்துறையில் உள்ள  முக்கிய இயக்ககங்கள் இணைந்து கூட்டுப் போராட்டம் நடத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment