"ராமநாதபுரம், பெரம்பலூர், நாகை ஆகிய மூன்று மாவட்டங்களில், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்கள், அமைக்கப்படும்" என, தமிழக அரசு அறிவித்துள்ளது. சட்டசபையில்,
கால்நடைத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், "மூன்று கால்நடை ஆராய்ச்சி மையங்கள், 2.7 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். கால்நடை மருத்துவ இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள், பட்டப் படிப்பை முடித்ததும், ஆறு மாதம், பயிற்சி பெறுகின்றனர். இந்த காலங்களில் வழங்கப்படும், 3,000 ரூபாய் ஊக்கத்தொகை, 4,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்" என, கூறி இருந்தார்
No comments:
Post a Comment