Saturday 27 July 2013

பி.எட். கலந்தாய்வு: ஓரிரு நாளில் அறிவிப்பு



        அரசு ஒதுக்கீட்டிலான பி.எட். படிப்பு இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பு  ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு
பி.எட்., மாணவர் சேர்க்கை செயலர் ஜி. பரமேஸ்வரி வெளியிட்ட செய்தி: அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் உள்ள பி.எட்., படிப்பு இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை சென்னை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்தி வருகிறது. இதுபோல் 2013-14 கல்வியாண்டு கலந்தாய்வுக்கான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment