Saturday 27 July 2013

சத்துணவு முட்டைகளை விற்றால் "சஸ்பெண்ட்"



             சத்துணவு மையங்கள், பள்ளிகளில் வழங்கப்படும் இலவச முட்டைகளை, விற்பவர்களை உடனடியாக "சஸ்பெண்ட்' செய்ய பி.டி.., க்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதுஅங்கன்வாடி மையங்களில்,
வாரத்தில் 3 நாட்களும்; சத்துணவு மையங்களில், 5 முட்டைகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன. முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு, வாழைப் பழம் வழங்கப்படுகிறது. முட்டை சாப்பிடாத குழந்தைகள் குறித்து, கணக்கெடுப்பு நடத்த, ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது. முட்டை வழங்குவதில் தவறான கணக்கு காட்டி, மைய பொறுப்பாளர்கள் சிலர், வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, முட்டை வழங்குவதை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், முறைகேடுகளில் ஈடுபடும் ஊழியர்களை உடனடியாக "சஸ்பெண்ட்' செய்ய, வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்கு (பி.டி..,) உத்தரவிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment