Saturday 31 August 2013

1,000 ஓராசிரியர் பள்ளிகளில் பாடம் நடத்துவதில் சிரமம்



            தமிழகத்தில், 1,000 துவக்கப் பள்ளிகளில், ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார். அவர்களே, ஐந்து வகுப்புகளுக்கு பாடம் நடத்துவதில் சிரமம் உள்ளது. காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்,'' என, ராமநாதபுரத்தில்,
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணை தலைவர், .மயில் தெரிவித்தார். அவர், கூறியதாவது: தமிழகம் முழுவதும், 1,000க்கும் மேற்பட்ட துவக்கப் பள்ளிகளில், ஒரு ஆசிரியர்மட்டுமே உள்ளார்.அவர்களே, ஐந்து வகுப்புகளுக்கு பாடங்களை நடத்துவதில் சிரமம் உள்ளது. இதனால், அரசு துவக்கப் பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதுபோன்ற பள்ளிகளில், போதிய ஆசிரியர் பணியிடங்களை நிரப்பி, மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக, இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஊதியம் வழங்க வேண்டும். ஆறாவது ஊதியக்குழுக்கு பின், இடைநிலை ஆசிரியர்களுக்கு பறிக்கப்பட்ட, மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வு முறையை ரத்துசெய்ய வேண்டும்.வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில், பணி நியமனம் வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment